சனி, 30 ஜூன், 2012

அவளோடு நான் (முதல் அனுபவம்).


 



அவள் பெயர் லட்சுமி
பெயருக்கு ஏற்ப லட்சணமானவள்
இதற்கு முன்
அவள் உடல் என்னில் பட்டதில்லை
அவளை நானும் தொட்டதில்லை


அன்று இன்னும் விடியவில்லை
கொல்லைப்பக்கமாக மா மரத்தடியில்
தனிமையில் முதன் முறையாக
அவளை சந்தித்தேன்


கிட்ட நெருங்கினேன்
அவள் எட்ட போனாள்
விட்டேனா நான்?
தொட்டேன் முதுகில் மெதுவாக
அவள் நாணத்தால் தலை குனிந்தால்
கன்னத்தில் தொடக்கி
கழுத்து வரை கையால் வருடினேன்


கடைக்கண்ணால் என்னை அவள்
எடைபோட்டால்
இவ்வளவு போதாதா  எனக்கு?
நான் புதியவன் - என்னுடன்
பிணங்குவாள் என்று பயந்தேன்
இணங்கிவிட்டாலே - விரைவாக
ஆசையை அடக்க முடியவில்லை


கழுத்திலிருந்து கையை எடுத்து
பெருத்த அவள் தனத்தை தடவினேன்
கூச்சத்துடன் மயிர் சிலிர்த்தாள்
எனக்கு தைரியம் வந்துவிட்டது
பெருவிரல்,சுட்டுவிரல்,நடுவிரல்
மூன்று விரல்களினாலும் ,அவளது
முலைக்காம்பை வருடினேன்
அவள் அசையவில்லை
இசைந்துவிட்டாள்


எனக்கோ எல்லையற்ற மகிழ்ச்சி
இன்ப உணர்ச்சி இதயத்தில் பொங்க
வந்த வேலையை தொடங்கினேன்
அவளது நான்கு முலைகளிலும் மாறி மாறி
நான்கு லிட்டர் பால் கறந்தேன்


நன்றி லட்சுமி
காலைக்கூட கட்டவில்லை - நீயோ
வாலைக்கூட ஆட்டாமல்
அசையாமல் ஒத்துழைத்தாய்
பாதிப்பாலை நான் கறந்தேன்
மீதிப்பாலை கன்றுக்கு கொடு
மீண்டும் நாளை சிந்திப்போம். 

வியாழன், 7 ஜூன், 2012

வெளிநாட்டு வாழ்க்கை


டாலருக்கும் ரியாலுக்கும் வாழ்கையை அடகு வைத்து மீட்க முடியாமல் நீரிலேயே மூழ்கி கிடக்கும் மீன் குஞ்சுகள்!

பண்டிகை நாட்களில் குடும்பத்தோடு குதூகலிக்க முடியாமல் happy new year ,happy festival என்று மனம் முழுக்க சோகத்தோடு கைப்பேசியில் கூக்குரலிடும் கையாலாகதவர்கள்!

இங்கே கண்ணே,,,கனியமுதே! என்றெல்லாம் காதலியை நெஞ்சுருக கொஞ்சி மகிழ அவள் நேரில் இல்லை!
கணணி பொறியிலும் கைப்பேசியிலும் காதலியின் குரல் கேட்டு கேட்டு எங்கள் காதல் கூட இங்கு கமர்ஷியல் ஆகிப்போனது...
தொலைதூர காதல் செய்தே தொலைந்து போனவர்கள் நங்கள்!

நான் இங்கே நல்லா இருக்கேன் என்று எப்போதும் சொல்லும் Default குரலுக்கு சொந்தக்காரர்கள்.
உணவில் குறையிருந்தாலும் உடல் நலக்குரையிருந்தாலும் first class என்று சொல்லியே பழகிப்போனவர்கள்.

வியர்வையில் நாங்கள் உழன்றாலும் விடுமுறைக்கு போகும் முன் வாசனை திரவியம் வாங்க மறப்பதில்லை!
எங்கள் வியர்வையின் வாசம் வீட்டில் உள்ளோர் அறியாமல் இருக்க.

கணிப்பொறிக்குள் அகப்பட்டுக்கொண்ட எலிகள் நாங்கள்! கலப்பை பிடிக்கவில்லை ஆனால் நாங்களும் களைத்துத்தான் போகிறோம்!

எண்ணெய் கிணற்று தவளைகள் நாங்கள்
வாயுக்குழாயில் சிக்கிக்கொண்ட வாயில்லா பூச்சிகள்!

திறைகடலோடி திரவியம் தேடும்
திசைமாறிய பறவைகள் நாங்கள்.
எங்களுக்கும் மாதக்கடைசி உண்டு என்பது யாருக்கும் புரிவதில்லை...
உனக்கென்ன!
விமானப்பயணம்,வெளிநாட்டு வேலை என்றெல்லாம் உள்ளூர் வாசிகள் விடும் பெருமூச்சு வளைகுடா நாட்டின் வெப்பத்தை விட சற்று அதிகமாகவே சுடுகிறது,,,,,

ஆரம்பத்தில் முதலீடில்லா தொழில் இது என்று பெருமிதப்பட்டோம்.
எங்களுக்கே தெரியாமல் எங்கள் இளமையை அல்லவா முதலீடு செய்திருக்கின்றோம்! இப்போதுதான் புரியத்துவங்கியது சேர்ந்தே நரைக்கவும் துவங்கியது!

நாங்கள் முதலீடு செய்தது எங்கள் வாழ்க்கையை! வாலிபத்தை!!

இழப்பீடு கிடைக்காத இழப்பு இது...
நஷ்டஈடு கிடைக்காத நஷ்டம் இது.....
யாருக்காக!!!
எதற்காக!!!!!!!!
ஏன்!!!!!!!!
தந்தையின் கடன்,
தங்கையின் திருமணம்,
தம்பியின் படிப்பு,
சொந்தமாய் வீடு,
குழந்தையின் எதிர்காலம்,
குடும்பச்சுமை...........
இப்படி காரணம் ஆயிரம் தோரணம் போல கண் முன்னே.....